தேவையான பொருட்கள்:
கடலை மாவு – 1 கப்
அரிசி மாவு – 1 tspn
உப்பு – தேவையான அளவு
மிளகாய்த்தூள் – 1 tspn
பூண்டு – 10 பல் (நசுக்கியது)(optional)
வேர்க்கடலை – 2 tspn
கறிவேப்பிலை – 1 ஆர்க்கு
மரசெக்கு கடலை எண்ணெய் – பொரிப்பதற்கு
செய்முறை:
1.அரிசி மாவை கடலை மாவுடன் ஒன்றாகக் கலந்து சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும்..
2.சலித்து வைத்துள்ள மாவுடன் அரை டீ ஸ்பூன் உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும்..
3.இப்பொழுது மாவுடன் தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவை விட சிறிது தளர்வாக கரைத்துக் கொள்ளவ வேண்டும்..
4.ஒரு வாணலியில் பொரிப்பதற்குத் தேவையான அளவு எண்ணையை ஊற்றிச் சூடாக்க வேண்டும்..
5.தட்டையான கரண்டியில் சிறிய துளைகள் கொண்ட பூந்திக் கரண்டியை எடுத்துக் கொண்டு, கரண்டியைச் வாணலியில் உள்ள எண்ணெய்க்கு நேர் மேலே ஒரு கையால் பிடித்துக் கொண்டு, மறு கையால் வேறொரு கரண்டியில் கரைத்த மாவை கரண்டி நிறைய எடுத்து பூந்திக் கரண்டியின் மீது ஊற்ற வேண்டும்..
6.கரைத்த மாவு கரண்டியில் உள்ள துளைகளின் ஊடே புகுந்து எண்ணெயில் விழுந்து பொரியும் படி செய்ய, பூந்தி கரண்டியை மாவு ஊற்றும் கரண்டி கொண்டு பரவலாக தோசைக்கு சுற்றித் தேய்ப்பது போல் தேய்க்க வேண்டும்..
7.எண்ணெயில் மாவுத் துளிகள் ) சிறிது சிறிதாக விழுந்து பொரியத் தொடங்கிய பிறகு, பூந்திகளைக் கரண்டியால் லேசாகத் திருப்பிவிட்டு மேலும் மொறு மொறுப்பாக பொரித்தெடுக்க வேண்டும்..
8.இவ்வாறு கரைத்த மாவு முழுவதையும் பூந்திகளாகப் பொரித்தெடுக்கவும்..
9.பொரித்து எடுக்கும் பூந்திகளை வடிதட்டு அல்லது பேப்பரில் போட்டு அதிகப்படியான எண்ணையை வடித்துக் கொள்ளவும்..
10.பிறகு வேர்க்கடலை, கறிவேப்பிலை, நசுக்கிய பூண்டை எண்ணெயில் போட்டு பொரித்து பூந்தியில் சேர்த்துக் கலக்க வேண்டும்..
11.பின் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகாய்த் தூளை கலந்து பூந்தி சூடாக இருக்கும் போதே அவற்றின் மீது சீராக பரவலாகத் தூவிக் கலக்க வேண்டும்.
இப்பொழுது சுவையான காரா பூந்தி தயார்..!!!
இப்பொழுது சுவையான காரா பூந்தி தயார்..!!!
குறிப்பு:1.பூண்டை தோல் உரித்து நசுக்காமல், தோலுடன் பூண்டை நசுக்கிச் சேர்க்கும் பொழுது நல்ல வாசனையாக இருக்கும்..
2.விருப்பம் உள்ளவர்கள் அவலையும் முந்திரிப் பருப்பையும் பாசி பயறு அல்லது பாசி பருப்பையும் பொரித்து பூந்தியுடன் சேர்த்துக் கொள்ளலாம்..
நன்றி : சாரா - அறுசுவை சைவ உணவுகளும் ஆரோக்கிய குறிப்புகளும்
to

No comments:
Post a Comment