பசலைக்கீரை/அரைக்கீரை - 3 கப்
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 1
உப்பு - தேவையான அளவு.
எண்ணெய் - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
சீரகம் - 1 டீஸ்பூன்
பூண்டு - 6 பற்கள்
.
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
.
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கீரை, தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து தண்ணீர் சிறிது ஊற்றி, மூடி வைத்து, 10 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும்.
.
பின் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வறுப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, கீரையில் சேர்த்து, சிறிது உப்பையும் சேர்க்க வேண்டும்.
பின்பு கீரையை ஒரு பாத்திரத்தில் போட்டு மத்து கொண்டு மசிக்கலாம் அல்லது மிக்ஸியில் போட்டு ஒருமுறை அரைத்துக் கொள்ளலாம்.
.
பிறகு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து கீரையுடன் சேர்த்தால், ஆந்திரா ஸ்டைல் கீரை மசியல் ரெடி!!!

No comments:
Post a Comment