Sunday, May 28, 2017

தினை பனீர் காட்டி ரோல்ஸ்

சிறுதானியத்தில் செய்யக்கூடிய லஞ்ச் ரெசிப்பிக்களை நமக்காக செய்து காண்பித்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் கிருஷ்ணகுமாரி.
தினை பனீர் காட்டி ரோல்ஸ்
தேவையானவை:
தினை மாவு - அரை கப்
கோதுமை மாவு - கால் கப்
உப்பு - தேவையான அளவு
பனீர் - 100 கிராம்
பெரிய வெங்காயம் - ஒன்று
கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
புதினா, கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
நெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:
தினை மாவு, கோதுமை மாவு, உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசையவும். பிறகு மாவை உருட்டி, சப்பாத்திகளாக தேய்த்து தோசைக்கல்லில் சுட்டெடுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்கவும். இதனுடன் துருவிய பனீர், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு, புதினா மற்றும் கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளவும். சப்பாத்தியின் மீது சிறிது நெய் தடவி பனீர் மசாலாவை உள்ளே வைத்து சுற்றவும். டிபன் பாக்ஸில் வைத்து, மேலே லேசாக நெய் தடவி வைத்தால், மதியம் சாப்பிட அருமையாக இருக்கும்.
நன்றி : ஆரோக்கிய உணவுகள் 

No comments:

Post a Comment