சிறுதானியத்தில் செய்யக்கூடிய லஞ்ச் ரெசிப்பிக்களை நமக்காக செய்து காண்பித்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் கிருஷ்ணகுமாரி.
மேத்தி-தேங்காய்ப்பால் புலாவ்
மேத்தி-தேங்காய்ப்பால் புலாவ்
தேவையானவை:
சீரகசம்பா அரிசி - 2 கப்
வெந்தயக்கீரை சிறிய கட்டு - 3
தக்காளி - ஒன்று
பெரிய வெங்காயம் - ஒன்று
இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
ஏலக்காய், கிராம்பு - தலா ஒன்று
பிரிஞ்சி இலை - சிறிதளவு
பச்சைமிளகாய் - 3
தேங்காய்ப்பால் - 2 கப்
புதினா, கொத்தமல்லித்தழை - சிறிதளவு
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
செய்முறை:
அரிசியைக் கழுவி 10 நிமிடம் ஊற வைக்கவும். கீரையை சுத்தம் செய்யவும். குக்கரை சூடாக்கி, எண்ணெய் மற்றும் நெய் விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்துத் தாளிக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து நிறம் மாற வதக்கியதும் இஞ்சி-பூண்டு விழுது, கீறிய பச்சைமிளகாய், கீரை சேர்த்து வதக்கவும். இத்துடன் மஞ்சள்தூள், தேங்காய்ப்பால் 2 கப், தண்ணீர் இரண்டு கப் சேர்த்துக் கொதிக்க விடவும். கொதி வரும் போது புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து ஊற வைத்த அரிசியையும் சேர்த்துக் கிளறவும். கொதி வந்ததும் குக்கரை மூடி, தீயை சிம்மில் 7 நிமிடம் வைத்திருந்து அடுப்பை அணைக்கவும். பிரஷர் அடங்கியதும், குக்கரை திறந்து அரை டீஸ்பூன் நெய் விட்டு கிளறிப் பரிமாறவும்.
நன்றி : ஆரோக்கிய உணவுகள்
No comments:
Post a Comment