Sunday, May 28, 2017

சென்னா-முட்டைகோஸ் புலாவ்

சிறுதானியத்தில் செய்யக்கூடிய லஞ்ச் ரெசிப்பிக்களை நமக்காக செய்து காண்பித்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் கிருஷ்ணகுமாரி.

சென்னா-முட்டைகோஸ் புலாவ்
தேவையானவை:
பாசுமதி (அ) சீரக சம்பா அரிசி - 2 கப்
வேக வைத்த கொண்டைக்கடலை - அரை கப்
துருவிய முட்டைகோஸ் - அரை கப்
தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்)
இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
பட்டை - சிறிய துண்டு
சோம்பு - ஒரு டீஸ்பூன்
கிராம்பு - ஒன்று
ஏலக்காய் - ஒன்று
பச்சைமிளகாய் - 4
புதினா, கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
நெய் - 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

செய்முறை:
அரிசியைக் கழுவி, 10 நிமிடம் ஊற விடவும். குக்கரை சூடாக்கி, எண்ணெய், நெய் சேர்க்கவும். பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு சேர்த்துத் தாளிக்கவும். நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியைச் சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கியதும், கீறிய பச்சைமிளகாய், கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து வதக்கவும். இத்துடன் துருவிய முட்டைகோஸ், கொண்டைக்கடலை, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். போதுமான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். அரிசியை சேர்த்து, கொதி வந்ததும் குக்கரை மூடவும். பிரஷர் குக்கரில் விசில் வந்ததும், தீயை சிம்மில் வைத்து 10 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும். பிரஷர் அடங்கியதும் குக்கரை திறந்து கிளறவும். தயிர்ப்பச்சடி அல்லது சிப்ஸுடன் பரிமாறவும். புரதச்சத்து நிறைந்த புலாவ்.
நன்றி : ஆரோக்கிய உணவுகள் 

No comments:

Post a Comment