செய்முறை


இட்லி அரிசியையும் பச்சரிசியையும் 4 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். இத்துடன் கேரட், சீரகம், மிளகு, காய்ந்தமிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும். தோசை மாவு பதத்தைவிட சற்று நீர்க்க கரைத்துக் கொள்ளுங்கள். கடுகு தாளித்து மாவுடன் கலக்கவும். தோசைக்கல் காய்ந்ததும் மாவை லேசான தோசைகளாக வார்த்து சிறிது எண்ணெய் விட்டு தோசையை மூடி வைத்து சுடவும். ஒரு புறம் வெந்ததும், மறுபுறம் திருப்பி விட்டு வெந்ததும் எடுக்கவும்.
நன்றி : பிரேமா சங்கர் - அறுசுவை சமையல் - சைவம்
No comments:
Post a Comment